மும்பை, ஜூலை.18: மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேவ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
எனினும் மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிடவில்லை.
அந்தக் காரணங்களுடன் விரிவான தீர்ப்பு பின்னர் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மும்பை பிரஸ் கிளப், மராத்தி பத்ராகர் பரிஷத் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர்கள் எஸ்.பாலகிருஷ்ணா, கேதன் திரோத்கர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தற்போது இந்த வழக்கை மும்பை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment