சென்னை, ஜூலை.18: ரசிகர்களிடம் தற்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்ஷன் இல்லாத திரைப்படங்களையும் அவர்கள் வரவேற்பதாகவும் என்றும் நடிகை அனுஷ்கா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நடிகர் விக்ரமுடன் நான் நடித்த தெய்வத் திருமகள் படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்தேன். அவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இருந்தனர்.
அடுத்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க பேசி வருகின்றனர். அது இன்னும் முடிவாகவில்லை. அவருடன் சிறுத்தை படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் இல்லாததால் நடிக்கவில்லை. கார்த்தியின் சகோதரர் சூர்யாவுடன் சிங்கம் படத்தில் நடித்தேன். அப்படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது.
சிங்கம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் காஜல் அகர்வால் நடிக்கிறார். அப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்காக வருத்தம் இல்லை என அனுஷ்கா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment