குடியாத்தம், ஜூலை 17: குடியாத்தம் அருகே காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, காதலனின் தந்தையை மாணவியின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்ததால் பதட்டம் நிலவுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.
குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எத்திராஜுலுவின் மகள் பவளக்கொடி (21). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் பிஏ 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதியின் (63) மகன் லாரி டிரைவர் அகத்திபாபு (30) என்பவர் காதலித்து வந்தார்களாம்.
இதுகுறித்து எத்திராஜுலு மகளிடம் கேட்டாராம். தனது காதல் விவகாரம் தந்தைக்குத் தெரிந்ததால் மனமுடைந்த பவளக்கொடி சனிக்கிழமை விஷம் அருந்தினாராம். இதில், அவர் இறந்தார். அவரது சடலம் அடக்கமும் செய்யப்பட்டதாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை எத்திராஜுலுவின் உறவினர்கள் சிலர் சென்று கருணாநிதியை அழைத்து வந்து பேச்சு நடத்தினார்களாம். உனது மகனால்தான் பவளக்கொடி இறந்தார் என கேட்டு அவரைத் தாக்கினார்களாம்.
இதில் படுகாயமடைந்த கருணாநிதி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் சின்னராஜாகுப்பம் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.
அங்கு அதிரடிப்படை போலீஸôர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பட்டாபி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
0 comments:
Post a Comment