Monday 18 July 2011

வாலிபருக்கு திடீர் நெஞ்சுவலி : புறப்பட்ட சில நிமிடத்தில் விமானம் தரையிறங்கியது!

சென்னை : மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.15 மணிக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் தோகாவுக்கு கிளம்பியது. மேலே பறக்க தொடங்கியதும் கோவையை சேர்ந்த தர்மராஜ் முரளி (30) என்பவருக்கு கடுமையாக நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார். இதை பார்த்த பணிப்பெண்கள், விமானிக்கு தெரிவித்தனர். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, விமானத்தை தரையிறக்க உத்தரவு பிறக்கப்பட்டது. இதன்பிறகு விமானம் தரை இறங்கியது. தயாராக இருந்த டாக்டர் குழுவினர், விமானத்தில் ஏறி முரளிக்கு முதலுதவி சிசிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்சில் ஏற்றி, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதன்பிறகு, 125 பயணிகளுடன் காலை 6 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

0 comments:

Post a Comment

Chitika

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites