பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட 11 பேர் 24 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகர் கலவரத்திற்கு புகழ்பெற்றதாகி வருகிறது. சமீபத்தில் அங்கு நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலவரம் கட்டுக்குள் வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே நேற்று மீண்டும் அந்நகரில் கலவரம் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் எல்லைப் பாதுகாப்புப் படையினர், துணை நிலை ராணுவப் படையினர் என மொத்தம் 500 ராணுவ வீரர்கள் கராச்சி நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment