ஸ்ரீவைகுண்டம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்காத நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ கைலாய தலங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிலும் பாதாள அறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாதாள அறையை தோண்டி பார்த்தனர். ஆனால் விலை மதிப்பு மிக்க தங்க ஆபரணங்களோ, வெள்ளி பொருட்களோ கிடைக்கவில்லை. முன்காலத்தில் இந்த இடம் தியான அறையாகவோ அல்லது சுனை சுப்பிரமணியர் சன்னதி முன் இருப்பதால் சுனை எனப்படும் நீருற்று பகுதியாகவோ இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment